அது எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்பட துவங்கிய காலம்.
வட தமிழகத்தில், ஊருக்கு ஒரு வன்னியர் சங்கம் என சிறு சிறு குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அதனை ஒருங்கிணைக்கும் பணியை உடையார்பாளையத்தை சேர்ந்த அய்.ஏ.எஸ் அதிகாரி சா.சுப்ரமணியம் துவங்கினார்.
மருத்துவர் இராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் பணிகள் தீவிரமடைந்தன. கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சங்கத்தை பலமிக்கதாக கட்டமைத்தார்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென கோரிக்கையை முன்னிறுத்தி வன்னியர் சங்கத்தின் பணிகள் சூடு பிடித்தன. போராட்டக் களம் மெல்ல மெல்லத் தயாரானது.
எம்.ஜி.ஆர் மிக உடல் நலம் குன்றி மேல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார்.
செப்டம்பர் 17 தொடர்சாலை மறியலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. 17 காலை போராட்டம் துவங்கினால், காவல் துறை அடக்குமுறையை பயன்படுத்தி போராட்ட்த்தை ஒடுக்குவார்கள்.
எனவே செப்டம்பர் 16 நள்ளிரவே போராட்டம் துவங்கியது. போராட்டம் என்றால் அதுவரை தமிழகம் கண்டிராத புதிய போராட்ட யுக்திகள்.
சென்னையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிற அத்தனை சாலைகளும் போராட்டக் குழுக்களால் கைப்பற்றப்பட்டன.
பின்னிரவு நேரம் என்பதாலும், ஊருக்கு வெளியே என்பதாலும் காவல்துறைக்கு செய்தி எட்டவில்லை. அது தொலைத் தொடர்பு வளராத காலம். தகவல் கிடைத்து காவல்துறை பணியில் இறங்குவதற்குள் நிலைமை கைமீறி போய்விட்ட்து.
சாலைகளின் ஓரம் இருந்த மரங்கள் அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டன. அறுக்கப்பட முடியாத பெரிய மரங்கள், பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டு சாலையில் சாய்த்து விடப்பட்டன.
போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்ட்து. சென்னையிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து உடபட அத்தனை வாகனங்களும், செங்கல்பட்டு தாண்டி ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
நிறுத்தப்பட்ட வாகனங்களில், அண்ணா அறிவாலயம் திறப்புவிழாவில கலந்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த கழகத் தோழர்கள் வந்த வாகனங்களும் அடங்கும்...
( தொடரும்... )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக