பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 14 டிசம்பர், 2012

அன்பு பா.ம.க நண்பர்களுக்கு,

அன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு,

( முகநூல்  பதிவுக்கான பதில்... )

வணக்கம் !

நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்படியே நான் தி.மு.க.

உங்கள் கொள்கைகளை எப்படி நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே போல் தான் நானும் எங்கள் கொள்கைகளை விரும்புகிறேன், பதிவிடுகிறேன்.

என் நிலைத் தகவலில் வந்து நீங்கள் வாதிடுவதால், நான் உங்களோடு வரப் போவதில்லை. என் நிலைத் தகவல் படித்தும், நீங்கள் என்னோடு வரப் போவதுமில்லை..

ஆனால். நீங்கள் கலைஞரை தாக்குவதை போல், நாங்கள் மருத்துவரை தாக்குவதில்லை. அதனால் மருத்துவர், கலைஞரை விட உயர்ந்தவருமில்லை.

நான் முகநூலில் புழங்குகிறவன், ஆனால் முகநூலில் மட்டுமே புழங்குகிறவன் கிடையாது, களத்திலும் நிற்பவன்.

முகநூலில் பதிவிடுவதாலே, நான் முகநூல் போராளியில்லை. ஆனால் நீங்கள் என்னை அப்படி நினைத்து கத்தி சுழற்றுகிறீர்கள். 

என் நிலைத்தகவலில், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றுகூட பொறுக்க முடியாமல், உங்கள் பின்னூட்டத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்.

வன்னிய இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக, நான் வன்னியர் சங்க சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள இயலாது. 

எனக்கு என்று சில கொள்கைகளும், சில நியாயங்களும் இருக்க செய்யும், உங்களுக்கு இருப்பது போலவே....

நீங்கள் எனக்கு வாக்களித்தது போலவே, விடுதலை சிறுத்தைகளும் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். 

உங்களைப் போல், அவர்களும் நிர்பந்தித்தால் யார் பக்கம் நான் நிற்க ?

ஐ.ஜே.கே போட்டியிட்ட போதும், எனக்கு மிகுதியாக வாக்களித்த வயலப்பாடி போன்ற உடையார் சமூகத்தினர் மிகுந்த கிராமங்களும் உண்டு. 

தே.மு.தி.க-விற்கு மிகுதியாக வாக்களித்த, வன்னியர்கள் மட்டுமே வாழ்கிற பெரியம்மாபாளையம் போன்ற கிராமங்களும் உண்டு.

வாக்கு விவரப் பட்டியல் என்னிடத்திலும் இருக்கிறது.

சில கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள்....பதில் தயார்...

ர. தமிழரசன் : சிவசங்கர் அவர்களே தெலுங்கு தட்சினாமூர்த்தி ஒன்றும் சும்மா கொடுக்கல இட ஓதிக்கிட்டை ......

பதில் :என்ன வாங்கிகிட்டு கொடுத்தார், அந்த இட ஒதுக்கீட்ட, உங்களுக்கு தெரியுமா ?

ர. தமிழரசன் : உங்களை தேர்தலில் வெற்றி பெற செய்தது உங்கள் சாதி ஓட்டுதானே ? ...

பதில் : கொஞ்சம் மேல படிங்க....

ர. தமிழரசன்: sivashankar avargalukku thidir endru vanniyar meethu karisanam vara karanam?

பதில் : எங்கள் தலைவர் கலைஞருக்கு 20% இட ஒதுக்கீடு கொடுக்கனும்னு வந்த கரிசனம் தான் எனக்கும்....

ர. தமிழரசன் : Dharmapuri kalavarathiil sivashankar annan avargalin nilai padu enna? Vilakkavum?!

பதில் : இதில் என் நிலைப்பாடு கள்ள மவுனம் என்று பலருக்கு கருத்து இருக்கிறது, இரண்டு தரப்பிலும். ஆனால் என் மவுனம், நல்ல மவுனம் என்றே நினைக்கிறேன். 

காரணம் மவுனம் சில நேரங்களில், நல்லதே செய்யும்... 

எம் பகுதியில், இதை போன்ற பிரச்சினையும் இல்லை, கருத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. 

இதில் கருத்து சொல்வதே, புதிய பிரச்சினைகளை கிளம்பும்.

ர. தமிழரசன் : intha porattathail dmk vin pangu enna? 

பதில் : தம்பி, போராடியது நீங்கள் தான், ஆனால் எம்.ஜி.ஆர் இடத்தில். 

எங்கள் பங்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தான்.....நீங்கள் போராடாமல்...

அதே போல், வேறு எவனும் கொடுத்திருக்கவும் மாட்டான்....எங்களைத் தவிர,...

ர. தமிழரசன் : sivasankar, அவர்கள் இந்த வீடியோ வ முழுவதும் பாருங்கள் இதில் வன்னியர் சங்க போராட்ட வரலாறு முழுவதும் பாருங்கள் ...சிரமப்பட்டு தொடர் எழுத வேண்டாம்...

பதில் : அந்த வரலாறு எனக்கு நல்லா தெரியும், என் வயசுக்கு... 

உங்க வயசுக்கு நல்லா பாருங்க.... 

இந்த பதில் போதுமென்று நினைக்கிறேன். இல்லன்னா சொல்லுங்க... பதில் தர தயாராகவே இருக்கிறேன்.

உங்கள் நண்பர்கள் சில தரக்குறைவான பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். சிலவற்றை நீக்கிவிட்டேன், ஆனால் பதில் சொல்ல தயாராகவே இருக்கிறேன்.

நீங்கள் உங்கள் பக்கத்தில், “ குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் யார் என்று தெரிய வில்லை பெரும்பாலான குன்னம் தொகுதி பொது மக்களுக்கு “ என்று நிலைத் தகவல் பதிவிட்டிருக்கிறீர்கள். அதற்கு நானும் விருப்ப சொடுக்கிட்டிருக்கிறேன் ( like போட்டிருக்கிறேன் ).

உங்கள் நிலைத்தகவலை எப்போது பதிவிட்டீர்கள் ?

மருத்துவர் ராமதாஸ் குறித்து நான் நிலைத் தகவல் போட்ட பிறகு....

ஆனால் நான் ராமதாஸ் குறித்து தரக்குறைவாக, ஏதும் விமர்சனம் செய்திடவுமில்லை. இட ஒதுக்கீடு கொடுத்தது, குறித்து மட்டுமே பதிவிட்டேன்.

மகிழ்ச்சி சகோதரர் தமிழரசன்.

இந்த நிலைத் தகவலில், நான் உங்கள் கருத்தை எதிர்பார்க்கவில்லை. 

தொகுதி குறித்து கருத்து சொன்னால், தலை வணங்கி செய்ய காத்திருக்கிறேன், காரணம் நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி.

பின்குறிப்பு : “குன்னம் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட்டு, டெப்பாசிட் வாங்க முடியுமா”, என்ற உங்கள் நண்பர் கோபால் போன்றவர்கள் கேள்விக்கான பதில், அடுத்தக் கடிதத்தில்.....

அன்போடு.... 
உங்கள் சட்டமன்ற உறுப்பினர்

எஸ்.எஸ்.சிவசங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக