பிரபலமான இடுகைகள்

சனி, 26 ஜனவரி, 2013

நல்ல பணியாளர். வாழ்க !

காலை, மருத்துவமனையில் இருந்ததால் அலைபேசியை 'அமைதியில்' போட்டிருந்தேன். பிறகு வழக்கப்படி தவறிய அழைப்புகளை அழைத்து பேசினேன்.

98410 என துவங்குகிற சென்னை எண், அழைத்தேன்.

" வணக்கம் ஸ்வாமி, நான் ........ பேசுகிறேன் "( அவர் சொன்ன பெயர் எனக்கு புரியவில்லை )

" வணக்கம். சிவசங்கர் பேசறங்க "

" சிவசங்கர் தான. உங்களுக்கு தான் போட்டேன் "

" நீங்க யார் பேசறீங்கன்னு புரியலை சார் "

" ஸ்வாமி, நான் ஸ்வரண்சிங் பேசறேன். எலெக்ட்ரோல் ( வாக்காளர் பட்டியல்) உங்களுக்கு கிடைச்சுடுச்சா..."

" கிடைச்சுடுங்க சார் "

" எங்க ஆந்திராவில இருக்கீங்களா, போன் தெலுகுல பேசுது "

" ஆமாம் சார், ஹைதராபாத்ல இருக்கன் "

" உங்க தொகுதியில பத்து பேருக்கு ஓட்டு சேர்க்கனும். என்ன பண்ணலாம் ?

" சார், நீங்கதான் எங்களுக்கே சேர்க்கனும்.... "

சிரித்துக் கொண்டே " சரி ஸ்வாமீ. ஓட்டர்லிஸ்ட் வந்துடுச்சான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். நன்றி ஸ்வாமீ"

" நன்றிங்க சார் "

இவர் ஸ்வரண்சிங், மூத்த IAS அதிகாரி.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறப் பணிக்கு மேற்பார்வையாளர் என்ற முறையில் தான், சரிபார்ப்பதற்காக இந்த அழைப்பு.

இதுவரை இந்த பொறுப்பில் இருந்தவர்கள் யாரும் இப்படி அழைத்து பேசியது இல்லை, அதிலும் மூத்த அய்.ஏ.எஸ் அதிகாரி.

இதனால் தான் தளபதி அவர்கள், கழக ஆட்சியில் முக்கியத் துறையான தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் , இவரை மேலாண்மை இயக்குனராக பணியாற்ற வைத்திருக்கின்றார்.

# நல்ல பணியாளர். வாழ்க !

1 கருத்து:

  1. ஒரு கலெக்டர் என்பவருக்கு இந்த அளவிற்கு பொதுமக்களுக்கு நன்மை செய்யமுடியும் என்பதை தூத்துக்குடியில் காண்பித்தவர் ,ப்ளீஸ் அவரை அனுப்புங்கள் முத்து நகருக்கே !

    பதிலளிநீக்கு