சிறு குழந்தைகள் ஆடும் போது, பாடல் குறித்த நமது கண்ணோட்டமே மாறிவிடுகிறது...
மாலை அரியலூர் அருகே தவுத்தாய்குளம் கிராமத்தில் விஜயதாரணி நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா. பேசி,பரிசளித்த பிறகு கலைநிகழ்ச்சிகள். சின்னக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி.
முதலில் பரதநாட்டியம், சிறப்பாக ஆடினார்கள். அடுத்து, “சொய், சொய்...” கிராமிய நடனத்தில் கலக்கினார்கள். பெண்கள் பக்கத்திலிருந்து இசைக்கு ஏற்ப கைதட்டி மகிழ்ந்தனர்.
“வேணாம் மச்சான் வேணாம்” பாடலுக்கு ஆண்கள் பக்கமிருந்து ஏக வரவேற்பு. பிள்ளைகளின் நிகழ்ச்சியில் பெற்றோர் கல்லூரி காலத்திற்கு போய்விட்டார்கள் போல...
“என்னாசை மைதிலியே” பாடலுக்கு குழந்தைகள் ஆடிய போது, பாடலின் விரசம் அடிபட்டு போனது. கந்தசாமியின் “அலக்ரா”, அவன்-இவன் இசைக்கோர்புக்கான நடனத்தை பார்த்த போது, திரைவடிவத்தை பார்க்க தூண்டியது... காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...
# தன தரனானே தானானே.....
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
"ஓடுகாலி" என்பதற்கான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளல் நலம். ஓடுகாலி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ப...
-
"நான் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லா திருடர்களும் ஆந்திராவிற்கு ரயில் ஏறி ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா சொன்னார். அப்படி என்றால் அவர்கள்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக