பிரபலமான இடுகைகள்
-
கலைஞன் பதிப்பகம், சென்னையில் தமிழ் நூல்களை பதிப்பித்துக் கொடுத்து தமிழ்பணியை சிறப்பாக செய்யும் அமைப்பு . 1956ல் மாசிலாமணி அய்யா அவர்கள் துவங...
-
"ஓடுகாலி" என்பதற்கான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ளல் நலம். ஓடுகாலி என்பதற்கு க்ரியா தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ப...
-
பத்து நாட்களுக்கு முன்பே அண்ணன் ஸ்ரீதர் கூப்பிட்டு சொன்னார், “சிவா, எந்த வேலை இருந்தாலும் வந்துடு. உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். வேற க...
புதன், 1 மே, 2013
நியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....
நடைப்பயிற்சி, வியர்வை வரும் அளவு வேகமாக...
ஒரு மணி நேர பயண கெடு முடியும் தருவாய். வெயில் தாழ்ந்திருந்தாலும் இன்னும் வெக்கை குறையவில்லை.
லேசாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது. தெரு விளக்குகள் மின்ன துவங்கியிருந்தன. சின்ன கடைகள் நிரம்பிய தெரு. யார் கண்ணிலும் படாமல் சற்று ஒதுங்கி நடந்தேன்.
அகலமான சாலை, கடைகள் இல்லாத பிரதேசம், நடமாட்டமும் அவ்வளவு கிடையாது. அடித்துக் கொண்டிருந்த மொபைலை தவிர்த்து நடந்துக் கொண்டிருக்கிறேன்.
பின்னாலிருந்து தொடர்ந்து ஹாரன் சத்தம். ஏதோ பைக் ஹாரன் சத்தம். சாலையில் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஏன் இப்படி ஹாரன் என்று கோபம் வந்தது.
இடதுபுறம் ஒதுங்கவும் இடம் இல்லை, வலதுபுறம் சாலையில் சிறு பள்ளம். பைக் சற்று பிரேக் அடித்து வரலாம். இருப்பினும் வேகமாக நடந்து வழிவிட்டேன்.
கடந்த பைக் பார்த்து இன்னும் கோபம் வந்தது, நான்கு பேர் பயணம் செய்தனர். ஒரு ஆண், இரண்டு பெண்கள், ஒரு சிறுவன்.
ஒரு பெண்னின் கையில் கைக்குழந்தை...
கோபம் வடிந்தது, நான் இன்னும் சற்று முன்னர் ஒதுங்கி, வழி விட்டிருக்கலாம் என்று தோன்றியது.
# நியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக