பிரபலமான இடுகைகள்

வியாழன், 2 மே, 2013

விஜய் டி.வியின் நானா நீயா - அரசியல் குறித்து மாணவ்ர்கள்...




கடந்த டிசம்பரில், நான் பங்கேற்ற அந்த விஜய் டி.வியின் நானா நீயா நிகழ்ச்சி குறித்த ஒரு சுவையான செய்தி....

" நமது அரசியல்வாதிகளை பற்றி உங்கள் கருத்து என்ன ? ", இது கோபிநாத்தின் கேள்வி.

மாணவர்களின் பதில்கள் அணிவகுக்க ஆரம்பித்தன....

* திருடர்கள்
* நடிகர்கள்
* சந்தர்ப்பவாதிகள்
* கொள்ளைக்காரர்கள்
* துரோகிகள்
* அயோக்கியர்கள்
* நாட்டை விற்பவர்கள்

இப்படி இதே அர்த்தத்தில், முப்பது மாணவர்களும் வெவ்வேறு வார்த்தைகளில் புகழ் மாலை சூட்டினார்கள். ஒருவர் கூட தவறியும் நல்ல வார்த்தை சொல்லிவிடவில்லை.

எதிர் வரிசையில் நான் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார், என கோபிநாத் முன்னரே சொல்லியிருந்தார்.

இருந்தாலும், பேண்ட் மற்றும் கட்டம் போட்ட சட்டையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை, அவர்கள் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை என நிகழ்ச்சி முடிவில் இரண்டு மாணவர்கள் சொன்ன போது அறிந்தேன்.

பிறகு சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, அரசியல் மூலம் விளைந்த சில நன்மைகளையும் ஒப்புக் கொண்டார்கள் .

எப்படியாகினும், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் என்றால் இன்றைய இளைய தலைமுறை மனதில் இருக்கும் வெறுப்பின் வெளிப்பாடாகவே இதை உணர்ந்தேன். அடுத்து நடந்தது தான் முரண்சுவை.

மாணவர்களை பார்த்து, அரசியலுக்கு வர விருப்பமுள்ளவர்கள் கை உயர்த்துங்கள் என்று கோபிநாத் கேட்டவுடன், பாதி பேர் கை தூக்கியது தான் ஹைலைட்.

(இதை ஒளிப்பரப்பில் எடிட் செய்து விட்டார்கள். )


# நாடளவு கஷ்டத்துல, நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலேயில்ல, அது தான் அரசியல் மச்சான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக