பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 30 ஜூன், 2013

மைக்செட் போடும் டாக்டர் அவர்களே !

மைக் பிடிக்கிறார் அண்ணன் பரிதி. "கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் டாக்டர் குப்புசாமி அவர்களே" அப்படிங்கிறார். குப்புசாமி" அண்ணே, நான் டாக்டர் இல்லை" என்கிறார். "எனக்கு தெரியாதா, பேசாம இருங்க சார். வரவேற்புரையாற்றிய டாக்டர்.ராமசாமி அவர்களே, கூட்டம் கேட்க வந்த டாக்டர்.பொதுஜனங்களே, பாதுகாப்பு கொடுக்கும் டாக்டர்.போலீஸ்களே, குறிப்பு எடுக்கும் டாக்டர். நிருபர்களே, மைக்செட் போடும் டாக்டர் அவர்களே" என்று நிறுத்தினார்.

யாருக்கும் எதுவும் புரியல. "என்னா நான் பேசறது கேட்டு கோவம் வருதா, அப்போ ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, டாக்டர்.ஜெயலலிதான்னா எனுக்கு எவ்ளோ கோவம் வரும். அவர் டாக்டர்னா, நீங்க எல்லாம் டாக்டர் தான்" அப்படின்னு அவர் முடிக்க எழுந்த சிரிப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது.

இன்னொரு கூட்டம். ஒரு அதிமுக எம்.எல்.ஏ பத்தி அவரு பேசினது இன்னும் நினைவிருக்கு. "கிராமத்தை சேர்ந்த எம்.எல்.ஏ மொத தடவையா சென்னை வந்தாரு. பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடடாரு. கடேசியா லெமன் ஜூஸ் வந்துது குடிச்சாரு நம்மாளு. பேரர் சிரிச்சாரு, காரணம் கேட்டாரு எம்.எல்.ஏ. அது பிங்கர் பவுல்." 

இப்படி அண்ணன் பரிதி எளிமையா, நகைச்சுவையா சொல்ல வந்த செய்திய கொண்டுப்போய் சேர்த்திடுவாரு. அவரு பேசறாருன்னா நல்ல கூட்டம் கூடும். மெட்ராஸ் தமிழில் பேசினாலும் தமிழ்நாடு முழுக்க அவருக்கு ரசிகர்கள் உண்டு.

91-96 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அவரது செயல்பாடு எந்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு உத்வேகம் தரும். தனி ஆளாக பெரும்படையை எதிர்த்தவர். அதற்காக தலைவரால் புகழப்பட்டவர்.

தூரத்திலிருந்து பார்த்து ரசித்தவரோடு பழகுகிற வாய்ப்பு கடந்த சட்டசபையில் தான் கிடைத்தது. எனக்கு முன் வரிசையில் இருந்தார். அன்பாக பழகுவார். சீரியஸா முகத்த வச்சிக்கிட்டு நம்ம கிட்ட எதாவது சொல்றார்னா, நாம ஜாக்கிரதையா இருக்கனும். அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நாம வெடிச்சி சிரிச்சிடுவோம். 

அவ்வளவு நக்கல், நையாண்டி, கிண்டல் நிறைந்த உரையாடலா இருக்கும். சட்டசபையிலும் யாராவது கேள்வி கேட்டா குசும்பா பதில் சொல்லி சிரிக்க வைப்பாரு. சில கேள்விக்கு அவரு கண்ண உருட்டி, கைய அசைச்சி பதில் சொல்றத்துக்கு முன்னாடியே சிரிக்க வச்சிடுவாரு.

தலைவர் கலைஞர் அவர்களா இருந்தாலும், தளபதி ஸ்டாலின் அவர்களா இருந்தாலும் அண்ணன் பரிதி சகஜமா பேசுவாரு, உரிமையா பழகுவாரு. சட்டமன்றத்தில் அதிமுகவை குறித்த இவர் பேச்சினால், ஒரு தடவை பிரச்சினை வந்த போது தலைவர் கண்டித்தார். இவர் உடனே கிட்டே போய்,"இல்லப்பா. அளவுக்கு மீறி அவங்க பேசனதினால, அப்படி பதில் சொன்னேன்னு " சமாதானம் செய்தார்.

இப்படி இங்க ஃப்ரியா இருந்தவரு எனக்கென்னவோ அங்க தாக்குப் பிடிப்பாருன்னு தோணல.

# அண்னன் ஓ.பி.எஸ் மாதிரில்லாம் அவரால "பணிவா" இருக்க முடியாது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக