பிரபலமான இடுகைகள்

வியாழன், 6 ஜூன், 2013

இளைய நிலா பொழிகிறது...

" ஆயிரம் நிலவே வா, ஓராயிரம் நிலவே வா " பாலு அழைத்தது ஓராயிரம் நிலவை தான், தன் முதல் தமிழ் பாடலில்.

ஆனால் பல்லாயிரம் நிலவை கடந்துவிட்டார். 1969ல் தமிழ் திரை உலகில் நுழைந்தவர் இன்றும் நம்மை பரவசப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்.

பாலு... இப்படி தான் இசைஞானி இவரை வாய் நிறைய அழைப்பாராம். ராஜாவின் மனதில் இருப்பதை உணர்ந்து அப்படியே வெளிப்படுத்துவதில் பாலு தான் டாப். எந்த உணர்ச்சி வேண்டும், குரலிலேயே வெளிப்படும்.

ஒரு கால கட்டத்தில் வரும் படங்கள் எல்லாம் இளையராஜா இசையாக இருக்கும். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் எஸ்.பி.பி-யாக இருக்கும். அதுவும் வெரைட்டியாக. உடன் ஜானகி குரல் என்றால் சொல்லவே வேண்டாம். விருந்து தான்.

பாலுவின் குரல் வளத்தை, நயத்தை, பலத்தை உணர ஒரு படம் போதும். " பயணங்கள் முடிவதில்லை".

மனதை வருட , " இளைய நிலா பொழிகிறது..." இரவில் இந்த இசை தாலாட்டை கேட்டால், பாலுவின் குரலில் நிலவு பொழிந்து, இதயம் நனைந்து...

இனிமையான டியுயட்க்கு " சாலையோரம் சோலை ஒன்று " பாடல். " பாவை இவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும், கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்" கேட்டு பாருங்கள பாலுவின் குரலை...

உற்சாகமூட்டும் குத்து பாடலுக்கு " ஏ ஆத்தா, ஆத்தோரமா வார்றியா ",
மென்மையான துள்ளலாக " தோகை இளம் மயில் " ,
சோக உணர்வுக்கு " வைகறையில் வைகை கரையில்".....

குரலின் நுட்பங்களை வெளிப்படுத்தும் , " ராக தீபம் ஏற்றும் நேரம் " பாடல். கேட்கும் போதே அந்த இருமல் நம்மை தொற்றிக் கொள்ளும்... " மணியோசை கேட்டு எழுந்து"

வெவ்வேறு நடிகர்களுக்கு வித்தியாசம் காட்டுவது ஒரு புறம், ஒரே நடிகருக்கே உணர்வில் வித்தியாசம் காட்டுவது ஒரு புறம், ஒரு படத்தின் பாடல்களிலேயே இத்தனை வித்தியாசம்...

# பாலு, உம் பயணங்கள் முடிவதில்லை !



( 04.06.2013 எஸ்.பி.பி பிறந்தநாள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக