பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

மூன்று முறை எம்.எல்.ஏ, அமைதியாகவே இருப்பார்...

இந்த மாதம் 5-ம் தேதி தான் அவரோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்குள் அவர் மறைவு செய்தி கிடைக்கும் என நினைக்கவில்லை. ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாள் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.

4-ந் தேதி சட்டமன்றக் குழுவான, பொது நிறுவனங்கள் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்காடு சென்ற போது, பெருமாள் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை. மறுநாள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தான் வந்தார்.

"உங்க ஊருக்கு நாங்கள் வந்தப்போது, எங்கே போனீர்கள்" என்று அவரது சக அதிமுக எம்.எல்.ஏக்கள் கிண்டல் செய்த போது, புன்னகையோடு "அவசரமா சென்னை போய் வந்தேன்" என பதிலளித்தார். கூட்டம் முடிந்தவுடன் கிளம்பும் போது எனக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றார்.

"சாப்பிடலையாண்ணே ?" என்று கேட்டேன். "ஒரு நிகழ்ச்சிக்கு போகனும்" என்று விடைபெற்றார். இப்போது தான் தெரிகிறது, மூன்று முறை எம்.எல்.ஏ. எளிமையாகவே பழகினார். அமைதியாகவே இருப்பார்.

# ஆழ்ந்த இரங்கல்கள்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக