பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 16 ஜூலை, 2013

குழந்த அண்ணன் அழறாரு...

நிறைய பேரு நான் அண்ணன்னு கூப்பிட்டா வயசு குறைவுன்னு பதறுறாங்க.... ஒரு மரியாதை தான்.

எங்க அண்ணன் ஒருத்தர் இருக்கார், அவர பத்தி சொன்னா தான் இவங்க சரியா வருவாங்க...
 அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. குன்னம் தொகுதியில் உள்ள ஆலத்தூர் ஒன்றிய கழக செயலாளர். ஏழு முறை ஒன்றிய செயலாளர். உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி. மக்களின் அன்பை பெற்றவர்.

அவர் எல்லோரையும் அண்ணன்னு தான் கூப்பிடுவாரு, தன்னை விட வயது குறைந்தவர்களையும். முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களின் மச்சினர்.

ஒரு முறை மீன்வளத் துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி எங்கள் பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தாரு. அவரை வரவேற்று அண்ணன் கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்து, “ வாங்க அண்ணே” அப்படின்னாரு. அவரு நெளிஞ்சிகிட்டே “என்னண்ணே உங்க வயசுக்கு என்னை அண்ணன்னு கூப்புடறிங்க”ன்னாரு. “அது பழக்கமாயிடுச்சிண்ணே” அப்படின்னாரு நம்ம அண்ணன்.

சாமி ”என்னை அப்படி கூப்புடாதீங்கண்ணே”ன்னு சொல்ல, நம்ம அண்ணன் அதுக்கும் “சரிண்ணே”ன்னு பதில் சொல்ல, அமைச்சர் சாமியால சிரிப்ப அடக்க முடியல. அண்ணனும் சிரிச்சிட்டாரு. அப்ப நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பத்தி ஒரு செய்தி எங்க பக்கத்தில உண்டுன்னு சொல்லி “அதை” சொன்னேன். மந்திரியும் கூட வந்தவங்களும் சிரிச்சு சிரிச்சு ஓய்ஞ்சு போனாங்க.

அப்புறம் திராவிடர் கழகத் தலைவர் சுற்றுபயணம் வந்த போது, “கிருஷ்ணமூர்த்தி ரொம்ப மரியாதையானவரா இருக்காரே’ன்னு கேட்க, அய்யாகிட்டயும் “அந்த செய்தி”யை சொன்னேன். “இனி கிருஷ்ணமூர்த்திய மறக்க முடியாதுய்யா” அப்படின்னு அய்யா சொல்லி சிரிச்சாங்க.

பத்து மாதங்களுக்கு முன்பு நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணம் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்தது. வாழ்த்துரை வழங்கிய எல்லோரும் கிருஷ்ணமூத்தி அண்ணனை பெருமையா சொல்லி “வயதில் குறைந்தவர்களையும் அண்ணன்னு கூப்பிடுவாரு”ன்னு பாரட்டினாங்க.

நான் வாழ்த்தும் போது “அந்த செய்தியை” சொல்லி வாழ்த்தினேன். திருமணத்தில் இருந்த எல்லோரும், தளபதி உள்பட சிரிக்க, நம்ம அண்ணனும் கண்ணில் தண்ணி வர சிரிச்சாரு.

“ அண்ணன் கிருஷ்ணமூர்த்தி எல்லோரையும் அண்ணன்னு கூப்பிடுவாருங்கறது தெரிஞ்ச விஷயம். அவர் பத்தி எங்க பக்கம் ஒரு செய்தி உண்டு. ஒரு நாள் அண்ணன் கார்ல போயிகிட்டிருந்தாரு. ஒரு இடத்துல வயல்ல நிறைய பேரு வேலை செஞ்சிக்கிட்டிருந்தாங்க.

வயல் ஓரமா ஒரு மரத்துல தூளி கட்டி ஒரு குழந்தைய படுக்க வச்சிருந்தாங்க. அந்த இடத்த அண்ணன் கார் கிராஸ் பண்றப்ப, அந்தக் குழந்த அழுதுகிட்டுருந்துது. உடனே அண்ணன் வண்டிய நிறுத்த சொல்லி இறங்கினாரு.

வயல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவங்கள பார்த்து, ”ஏம்மா, அண்ணன் அழுதுகிட்டு இருக்காரு, வந்து தூக்குங்கம்மா” அப்படின்னு சொல்ல, அந்த குழந்த அண்ணனே அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு”

# இப்ப சொல்லுங்கண்ணே, அண்ணேன்னு நான் கூப்பிடறது சரிதானேண்ணே ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக