பிரபலமான இடுகைகள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

சாம்பாரில் பல்லி - மாணவர்கள் பாதிப்பு

குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19.08.2013 அன்று சத்துணவு சாப்பிட்ட சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததுள்ளது. பார்த்த மாணவர்கள் பயந்து போனதை அடுத்து உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கிட்டதட்ட 100 மாணவர்கள். பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்பு ஏதும் இல்லையென்ற போதும், மூன்று மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து பராமரித்தனர். 

பதற்றப் படாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஊர் பொதுமக்கள், விரைந்து சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி.

நான் தர்மபுரியில் இருந்ததால் அலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவரிடம் பேசி நிலவரம் அறிந்தேன். எங்கள் சார்பாக அரியலூர் நகர்மன்ற தலைவர் முருகேசன் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

மாணவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர்.


ஊர் திரும்பியவுடன் பள்ளிக்கு சென்றேன்.

சத்துணவுக்கூடத்தை உடனடியாக வெள்ளையடிக்க சொல்லி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணி நடைபெற்று வருகிறது. இடநெருக்கடியை தீர்க்க கூடுதல் கட்டிட வசதிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அந்தக் கட்டிடத்தை ஒட்டி தனியார் நிலம் உள்ளதால் அந்த இடத்தில் சுற்றுசுவர் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சொன்னதன் பேரில் அதற்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்தேன். 


குழந்தைகள் நலனும் கேட்டறிந்தேன். அனைவரும் பாதிப்பின்றி நலமாக உள்ளனர். 

#
அரசு தமிழகம் முழுதும் சத்துணவு சமையலறை கட்டிடங்களுக்கு வெள்ளையடித்து பராமரிக்க உத்தரவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக