பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

பொதுக் கூட்டம் போட்டுப் பார்....

மிகுந்த மகிழ்ச்சி.

வீட்டக் கட்டிப் பார், கல்யாணத்தப் பண்ணிப் பார். இது தெரிஞ்ச சேதி தான். அதிலும் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் மேற்கொள்வது எவ்வளவு டென்ஷன்னு அனுபவிச்சா தான் தெரியும்.

அது போல ஒரே நேரத்தில் தளபதி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், இளைஞர் அணி பயிற்சிப் பாசறை. பொதுக் கூட்டம் அரியலூரில், பாசறை பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில்.

                                                                                                                                                                                                        இடைப்பட்ட தூரம் 70 கி.மீ. ஒரு பயணம் போய் வந்தாலே 140 கி.மீ. அரைநாள் போய் விடும். 16-ந் தேதி முதல் விசிட் துவங்கியது. இது வரை ஏழு முறை பயணம். மற்ற நாட்களில் நிதி திரட்டும் பயணம்.

ஒரு நாள் அரியலூர் மாவட்டக் கழக கூட்டம், ஒரு நாள் இளைஞர் அணி கூட்டம், மாணவர் அணி கூட்டம். அடுத்து இதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டங்கள்.


                                                                                                                                                                                                                                      20 நாட்களுக்கு முன்பு தளபதி அவர்கள் தேதி உறுதி செய்யப்பட்டது. அன்று ரன்னிங் ரேஸ் ஆரம்பித்தது, ரிலே ரேஸும் கூட. இன்று தான் வெற்றிகரமாக முடிந்தது. அது தான் மிகுந்த மகிழ்ச்சி.

16-ந் தேதி சென்ற போது, மலையாளப்பட்டியில் 3 இடங்களை பார்வையிட்டோம். அதில் ஒரு இடம் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்தது. அது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிளைக் கழக செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் இடம்.

பச்சை மலையின் அடிவாரம். மூன்று புறம் மலைகள் சூழ வயல் வெளி. அந்த இடத்தை தேர்வு செய்தவுடன் அவர் வயல்வெளியை சுத்தம் செய்து ரோலர் ஓட்டி சமன் செய்தார்.

பந்தல் போடும் பணி துவங்கியது. அன்பகம் கலை அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றார். அண்ணன் ஆ.ராசா அவர்கள் மூன்று நாள் தங்கி பணியை செம்மைப் படுத்தினார்.

அவர் மூன்று நாள் பெரம்பலூரில் தங்கிப் பணியாற்றியது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது. அதே போல நிகழ்ச்சியும் மெருகேறியது. 

 பயிற்சி பாசறைக் கூட்டம் கட்டுக்கோப்புடனும், எழுச்சியோடும் நடைபெற்றது. அரியலூரில் நிதியளிப்பு பொதுக் கூட்டம் பெருத்த வெற்றியாக அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ் நாளில் மறவாது. தளபதி அவர்களுக்கும்.

 

# மிகுந்த மகிழ்ச்சி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக