பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 அக்டோபர், 2013

நான் கவிஞனுமில்லை....

பத்திரிக்கையாளர் பெ.கருணாகரன் சார் தன் முகநூல் நண்பர்களை கவிஞர்களாக்கி அழகு பார்க்கனும்னு ஆச பட்டார்.

"சாத்தான் சிரித்தான் சத்தமாக" என்பதனை முதல் வார்த்தையாகக் நொண்டு கவிதை எழுதக் கேட்டுக் கொண்டார்.

நான் உடனே டிரை பண்ணினேன்....

கீழ்கண்டவை நம்ம படைப்புகள்:

"சாத்தான் சிரித்தான் சத்தமாக
நீர் எமை கவிஞனாக்க
முனையும் போது..."

"சாத்தான் சிரித்தான் சத்தமாக
நாம் முகநூல் கணக்கு
துவங்கிய போது...."

பயந்து லைக் போட்டுட்டார் !


"சாத்தான் சிரித்தான் சத்தமாக
அவர் லைக் போட்டு
ஒரு சத்ருவை உருவாக்கியதற்காக"

இப்போ இதை படிக்கும் உங்களுக்காக:


"சாத்தான் சிரித்தான் சத்தமாக
என் கவிதை வடிவில்
உங்களைப் பார்த்து..."

"சாத்தான் சிரித்தான் சத்தமாக
கவிஞர்கள் பேனாவை
தூக்கும் போதெல்லாம்...."

                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக