பிரபலமான இடுகைகள்

சனி, 26 அக்டோபர், 2013

எழுத்தாளர் மிருகம் எழுந்தாச்சு....

என் முகநூல் பதிவுகளை படித்து விட்டு அண்ணன் ஸ்ரீவில்லிப்புத்தூர் கதிரவன் விமர்சனங்கள் வைப்பார். அவர் பத்திரிக்கையாளர் என்பதால் அவர் பார்வையில் சொல்வார். அப்புறம் ஒரு கட்டத்தில் எழுத்து கைகூடி விட்டது, அடுத்து பத்திரிக்கை தான்னு சொன்னார். "ஏண்ணே, ஏன் இந்த கொல வெறி" அப்படின்னு சொல்லி விட்டுட்டேன்.

அப்புறம் ஒரு நாள் ஃபோன் செய்தார். " அண்ணே, உங்க முகநூல் பதிவ எல்லாம் சேமிச்சு வச்சிருந்தேன். லேப்டாப் கிராஷ் ஆயிடுச்சி. ஒரு புத்தகத்துக்கு ரெடி பண்ணிட்டு சொல்லலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சி, நீங்க சேமித்து வைத்திருக்கீங்களா ?" அப்படின்னார். "இல்லண்ணே. ஃபேஸ்புக்ல இருக்கறது தான்"னு சொன்னேன்.

                            

மீண்டும் ஒரு நாள் அழைத்தார். "ஏண்ணே, பிளாக்ல இந்த பதிவெல்லாம் போட்டுருக்கிறத சொல்லல ?. இது போதும். புத்தகம் ரெடி பண்ணிடலாம்" அப்படி என்றார். இது போல கழகப் பதிவுகளை பார்க்கிற கழகத் தோழர்கள் முரசொலிக்கு அனுப்பலாமே அப்படிம்பாங்க. நாம அசர்ரதே இல்ல.

அப்பப்போ அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் அண்ணன் சொல்வார், "சார் எழுத்து சூடு பிடிச்சுடுச்சி". சமீபத்தில் ஒரு பதிவில் போட்ட கமெண்ட்டில் சகோதரர் சிவசங்கரன் சரவணன் "அண்ணே...! உங்களுக்குள் தூங்கிக்கிட்ருந்த எழுத்தாளர் மிருகம் எழுந்தாச்சு. உடாம எழுதுங்கள்." என்றார்.

என் கல்லூரி நண்பர் பாலா குறித்த பதிவை படித்த எல்லோருமே கலங்கிப் போனாதாக சொன்னார்கள். அதனை படித்த கழக சொற்பொழிவாளர் அண்ணன் கவிஞர் ஈரோடு இறைவன் அலைபேசியில் அழைத்தார். " உங்க பதிவ படிச்சேன். பாலா மனசுல பதிஞ்சு போனாரு."

"உங்க எழுத்துகளை தொகுத்து புத்தகமா போட்டிடலாம். நான் பதிப்பாளர் கிட்ட பேசறேன். சென்னை வந்துடறேன். கட்டுரைகளை செலக்ட் பண்ணி தொகுத்திடலாம்" என்றார். "அண்ணே, சும்மா தோனுணத எழுதிகிட்டிருக்கேன். நீங்க வேற" என்றேன். "இல்ல நிஜமாதான் சொல்றேன்" அப்படின்னார்.

மறுநாள் காலை ஒரு அலைபேசி அழைப்பு. நக்கீரன் இணை ஆசிரியர் அண்ணன் காமராஜ். "சிவா ஃபேஸ்புக்ல எழுதுறது தான் நல்லா இருக்கு. இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பத்தி எழுதி அனுப்புங்க. இந்த வாரம் போட்டுடலாம்" என்றார்.

சட்டமன்றம் முடிந்த உடனே உட்கார்ந்து ஸ்டேடஸ் அடிக்கற மாதிரி அடிச்சி அனுப்பி விட்டேன். அதிலருந்து ஒரு பாரா சின்ன ஸ்டேடஸா போட்டேன். அரங்கன்.தமிழ் தனி செய்தியில் கேட்டார். "என்னண்ணே, அப்டேட் சின்னதா இருக்கு ?" "இது டிரெய்லர். சனிக்கிழமை ரிலீஸ்" அப்படி என்றேன். ரிலீஸ் ஆயிடுச்சி.

நன்றி நக்கீரன் ஆசிரியர் திரு.கோபால் அவர்களுக்கும், இணை ஆசிரியர் அண்ணன் காமராஜ் அவர்களுக்கும்.

என் எழுத்தை உற்சாகப்படுத்தி வரும் துணை ஆசிரியர் அண்ணன் கோவி.லெனின் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்கள் சகோதரர் யுவகிருஷ்ணா, பாரதிதம்பி, அதிஷா ஆகியோருக்கும் நன்றி பல. 

இதற்கெல்லாம் அடிப்படையாக என் முகநூல் எழுத்துகளை லைக்கி, கமெண்ட்டி ஊக்குவித்த அத்தனை முகநூல் நண்பர்களுக்கும் நன்றி , நன்றி ! 

 நம்ம  முகநூல் மார்க்குக்கும் நன்றி ! (விடமாட்டோம்ல)

# கடையில நக்கீரன் வாங்கி படிச்சிட்டு சொல்லுங்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக