பிரபலமான இடுகைகள்

புதன், 13 நவம்பர், 2013

1980-2000-ம் என்றால் சுஜாதா ரசிகர்களாக தான் இருப்பார்கள்...

 ஒரு தலைமுறைக்கு கல்கி, சாண்டில்யன் எழுத்து பாதிப்பு இருக்கும். தீவிர வாசகர்கள் என்றால் புதுமைபித்தன், ஜெயகாந்தன் வாசனை இருக்கும். திராவிட இயக்க உணர்வாளர்கள் தாண்டி கலைஞரின் வசன வீச்சு உண்டு. 1980-2000-ம் என்றால் சுஜாதா ரசிகர்களாக தான் இருப்பார்கள்.

அப்போது வந்த எழுத்தாளர்களுக்கும் அவர் பாதிப்பு உண்டு. படிப்போருக்கும் அந்த சாயல் எழுத்துக்கள் பிடித்துப் போனது. சுஜாதாவை படித்தவர்களுக்கு எழுதும் ஆர்வம் இயற்கையாக வரும்.

நான் எழுதும் எழுத்துகளின் மூலம் கலைஞரும் சுஜாதாவுமே. காலத்திற்கு ஏற்றார் போல் புதுப்பித்துக் கொள்ளக் கூடியவர்கள் இருவருமே. சுஜாதாவின் சாயல் இவரிடம் இருந்ததால் இவர் எழுத்தும் பிடித்துப் போனது.

இவர் சுஜாதா ரசிகரா என்பது தெரியாது. ஆனால் அவர் பாதிப்பு உண்டு. அவரை போலவே எல்லா துறைகளையும் கையாளக் கூடியவர். முகநூலுக்கு வந்த பிறகே அறிமுகம்.

ஒரு காலத்தில் இணையம் வெளிநாட்டில் இருப்போருக்கே வாய்த்ததாக இருந்த போது இவர் என்ட்ரி ஆகிவிட்டார். காரணம் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்ததால். ஆனால் வெளிநாட்டில் பணிபுரிந்த பலர் அங்கு மலிவாக கிடைத்த மற்ற விஷயங்களில் மூழ்கிவிட, இவர் இதில் ஆழம் பார்த்தார்.

திராவிட உணர்வாளர்கள் குறைவாக இணையத்தில் புழங்கிய நேரத்தில் இவர் அதில் தீயா வேல பார்த்தவரு. கொள்கை வேலையை பார்த்ததால் இவர் பொது அரங்கிற்கு வரவில்லை. முயற்சி எடுத்திருந்தால் தமிழ் சமூகத்திற்கு சுவாரஸ்யமான வெகுஜன எழுத்தாளர் கிடைத்திருப்பார்.

அந்த அளவிற்கு அவர் எழுத்தில் வெரைட்டி இருக்கும். அவர் blog படித்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் கழகத்திற்கு கொள்கை வாள் கிடைத்திருக்கிறார். அவரிடம் பேசினால் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்.

முகநூலில் இறங்கிய பிறகு தான் இவர் அறிமுகம். 2010-11-களில் 2ஜி பிரச்சினையின் அடியும் தெரியாமல், நுனியும் தெரியாமல் பலர் அவதூறு பிரச்சாரத்தில் இருந்த நேரம். நான் அண்ணன் ராசாவின் உடன் இருப்பவன், வாதிடுவது இயற்கை.

ஆனால் இவரை போன்ற வெகு சிலரே இந்தப் பிரச்சினையில் துணிவாக வாதிட்டவர்கள். அப்போது தான் இவரை கவனித்தேன். நேரில் சந்தித்த போது தான் தெரிந்தது, அந்த பிரச்சினை துவங்கிய நாள் ஒன்றிலிருந்து அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார். 2ஜி-யில் தவறு நடக்கவில்ல, பழி வாங்குகிறார்கள் என்பதில் ஆதாரப் பூர்வமாக வாதிட்டார்.

பதவியில் இருப்பதால் அந்த உணர்வு இல்லை, நாளை பதவிக்கு வர வேண்டும் என்றும் அந்த உணர்வு இல்லை, இன்னும் சொல்லப் போனால் நேரடி அரசியலிலேயே இல்லை. தன்னை போன்றோர் ஆளானதற்கு திராவிட இயக்கமே காரணம் என்ற நன்றி உணர்வு தான் காரணம்.

நன்றி உணர்வு, இந்த காலத்தில் அரிதான ஒன்று. அந்த உணர்விற்காகவே உங்களை, உங்கள் பிறந்தநாளில் வாழ்த்தும் கடமை எனக்கு இருக்கிறது, அண்ணன் தொல்காப்பியன் என்கிற அபி அப்பா அவர்களே !

# திராவிடக் (கொஞ்சம் ஒல்லியான)  காளை வாழ்க !                                                

                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக