பிரபலமான இடுகைகள்

திங்கள், 18 நவம்பர், 2013

செங்குட்டுவனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நன்றி !

செங்குட்டுவன் டெய்லராக வாழ்க்கையை துவங்கியவர். கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டு, இணைந்து பணியாற்றினார். அப்படியே சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

1996-ல் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். வெற்றி அளித்த மக்களுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார். முழு நேரமும் பொதுப் பணி தான்.

அது காரைக்குறிச்சி ஊராட்சி, தா.பழூர் ஒன்றியம், அரியலூர் மாவட்டம். அவரது அயராதப் பணியால் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெறுகிறார்.

ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர்கள் அனைவரையும் திருப்திபடுத்த வேண்டும், மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று முனைந்தால் அவ்வளவு தான். வேறு வேலையே பார்க்க முடியாது.

இப்படிப் பணிகளிலேயே காலத்தை கழித்தவர் குடும்பத்தார் வற்புறுத்தலால் திருமணம் செய்யும் போது வயது 44. இடையில் தி.மு.கவில் இணைந்து பணிகளை தொடர்ந்தார்.

2006 தேர்தலிலும் வெற்றி பெற்றார். முன்னிலும் தீவிரமாக பணியாற்றினார். 2011 தேர்தல் வந்தது. மூன்று முறை இவரே வெற்றி பெற்று வந்ததால் போட்டி வேறு விதமாக வந்தது, பொறாமையோடு.

அந்த ஊராட்சியில் இரண்டு குக்கிராமங்கள். இவரது கிராமத்தில் இன்னும் இருவர் போட்டியிட்டு ஓட்டுகளை பிரிக்க, அடுத்த கிராமத்தில் ஒருவர் மட்டும் போட்டியிட்டு மொத்த ஓட்டுகளையும் பெற்று வெற்றியடைந்தார். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் தான்.

மன உளைச்சலில் கிராமத்து வீட்டை விட்டு வயலில் வந்து தங்கினார். வயலை ஒட்டி செல்கின்ற சாலையில் மதனத்தூர்- நீலத்தநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றில், கழக ஆட்சிக் காலத்தில் உயர்மட்ட பாலம் அமைந்தது. கும்பகோணம்-ஜெயங்கொண்டம் நேரடியாக இணைந்து சாலை பிஸியானது.

முழு நேரமும் பொதுப்பணியில் கழித்த செங்குட்டுவன், இப்போது தான் குடும்பம் பக்கம் திரும்பினார். தோல்விக்கு பிறகு எதையாவது சாதிக்கும் எண்ணம். டெய்லராக இருந்த போது வாங்கிப் போட்ட நிலத்தை விற்றார், பாலம் வந்ததால் நிலத்தின் விலை உயர்ந்து இருந்தது. 


அந்தப் பணத்தைக் கொண்டு குடியிருந்த வயலில் ஒரு திருமண மண்டபத்தை கட்டினார். குடும்பத்தினருக்கு நிம்மதி. பொதுப் பணியும் தொடர்கிறார்.

15.11.2013 அன்று காலை ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தலைமையில் மண்டபத்தை திறந்து வைத்தேன். அப்போது இப்படி பேச ஆரம்பித்தேன்....

# செங்குட்டுவனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நன்றி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக