பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சாவிலும் கொள்கை படித்து சாக வேண்டும்.....

அய்யா கோ.சாமிதுரை மறைவு.

திராவிடர் கழகத்தின் பொருளாளர். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் அணுக்கத் தொண்டர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பர். திராவிடர் கழகத் தொண்டர்களின் விருப்பத் தோழர். 

மெலிந்த தேகம், நெடிய உருவம், பழுத்த அனுபவம், தளராதக் கொள்கை, குன்றாத நகைச்சுவை உணர்வு, எப்போதும் கருப்புச் சட்டை, வெள்ளை உள்ளம், சிறாரையும் மதிக்கும் பாங்கு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. வயது 81. படிக்கும் காலத்திலேயே தந்தைப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். திராவிடர் கழகத்தால் ஆசிரியரோடு நண்பர். சட்டக் கல்லூரியில் இருவரும் நண்பர்கள். அந்த நட்பு வரை கடைசி வரை குன்றாமல் தொடர்ந்தது.

கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் பணி தொடங்கி, அந்தப் பகுதியில் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். தொழில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அதை விடுத்து முழு நேரக் கழகப் பணிக்கு வந்தவர். அவ்வளவு கொள்கையுணர்வு.

என் தந்தை எஸ்.சிவசுப்ரமணியன், அய்யாவிடம் ஜூனியராக வழக்கறிஞர் பணி கற்றவர். சீனியர், ஜூனியராக இல்லாமல் சம தோழராக நட்பு பாராட்டியவர்.

இந்த ஆண்டு தலைவர் கலைஞர் பிறந்தநாள் அன்று, தலைவருக்கு சால்வை அணிவிக்க பெரியார் திடலில் காத்திருந்தார் என் தந்தை. உடல் நலக் குறைவுக் காரணமாக, நிற்க சிரமப் படுவதை பார்த்து விட்டார் அய்யா சாமிதுரை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொடுத்து அமர சொல்ல, என் தந்தை மறுக்க," நீ உட்காருய்யா" என வாஞ்சையோடு சொல்லி அமர வைத்து அவர் நின்றிருந்தார். அவரும் உடல் நலிவுற்று தான் இருந்தார் அப்போது. அது தான் அவர் பண்பு.

09.11-2013 அன்று காலை உடல் நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அய்யா உடலுக்கு தலைவர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இவரது மருமகன் குழந்தை.தமிழரசன், விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர். கழக தீர்மானக் குழு உறுப்பினர்.

உயிர் பிரியும் நேரம் அய்யா செய்து கொண்டிருந்த பணி, புத்தக வாசிப்பு. வாசித்தப் புத்தகம் : "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்".

# சாவிலும் கொள்கை படித்து சாக வேண்டும், என்றன் சாம்பலிலும்...



                                 Photo: அய்யா கோ.சாமிதுரை மறைவு.

திராவிடர் கழகத்தின் பொருளாளர். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் அணுக்கத் தொண்டர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பர். திராவிடர் கழகத் தொண்டர்களின் விருப்பத் தோழர். 

மெலிந்த தேகம், நெடிய உருவம், பழுத்த அனுபவம், தளராதக் கொள்கை, குன்றாத நகைச்சுவை உணர்வு, எப்போதும் கருப்புச் சட்டை, வெள்ளை உள்ளம், சிறாரையும் மதிக்கும் பாங்கு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. வயது 81. படிக்கும் காலத்திலேயே தந்தைப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். திராவிடர் கழகத்தால் ஆசிரியரோடு நண்பர். சட்டக் கல்லூரியில் இருவரும் நண்பர்கள். அந்த நட்பு வரை கடைசி வரை குன்றாமல் தொடர்ந்தது.

கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் பணி தொடங்கி, அந்தப் பகுதியில் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். தொழில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அதை விடுத்து முழு நேரக் கழகப் பணிக்கு வந்தவர். அவ்வளவு கொள்கையுணர்வு.

என் தந்தை எஸ்.சிவசுப்ரமணியன், அய்யாவிடம் ஜூனியராக வழக்கறிஞர் பணி கற்றவர். சீனியர், ஜூனியராக இல்லாமல் சம தோழராக நட்பு பாராட்டியவர். 

இந்த ஆண்டு தலைவர் கலைஞர் பிறந்தநாள் அன்று, தலைவருக்கு சால்வை அணிவிக்க பெரியார் திடலில் காத்திருந்தார் என் தந்தை. உடல் நலக் குறைவுக் காரணமாக, நிற்க சிரமப் படுவதை பார்த்து விட்டார் அய்யா சாமிதுரை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொடுத்து அமர சொல்ல, என் தந்தை மறுக்க," நீ உட்காருய்யா" என வாஞ்சையோடு சொல்லி அமர வைத்து அவர் நின்றிருந்தார். அவரும் உடல் நலிவுற்று தான் இருந்தார் அப்போது. அது தான் அவர் பண்பு.

இன்று காலை உடல் நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அய்யா உடலுக்கு தலைவர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

நண்பகல் உடல் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. நாளை (10.11.2013) இறுதி நிகழ்வுகள்.

இவரது மருமகன் குழந்தை.தமிழரசன், விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர். கழக தீர்மானக் குழு உறுப்பினர்.

உயிர் பிரியும் நேரம் அய்யா செய்து கொண்டிருந்த பணி, புத்தக வாசிப்பு. வாசித்தப் புத்தகம் : "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்".

# சாவிலும் கொள்கை படித்து சாக வேண்டும், என்றன் சாம்பலிலும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக