பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 3 டிசம்பர், 2013

வெற்றிச்செல்வன் !

தளபதி அவர்கள் ஏற்காடு தொகுதி சுற்றுப் பயணத்தில், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தினருக்கு மூன்று இடங்களில் நிகழ்ச்சிகள். ஜலகண்டாபுரம், சர்க்கார் நாட்டார் மங்கலம், பெரியம்மாபாளையம். 29.11.2013 வெள்ளிக் கிழமையன்று.

ஜலகண்டாபுரத்தில் 751 ஓட்டுகள் தான். 400 ஓட்டுகள் தான் ஊரில் இருக்கும். மீதி வயலில் வசிப்பவர்கள். அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட இளைஞரணியினர் தேர்தல் பணியாற்றும் பகுதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் தலைமையில்.

இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் ஒரு அணி. தினம் இரண்டு மணி நேரம் அங்கு அமர்ந்திருப்பார். திமுதிமுவென கார்களில் வருவார், போவார். அன்று காலை தான் வீட்டுக்கு வீடு "இரட்டை" இலை அன்பளித்திருந்தனர்.

அதனால் மக்கள் தளபதி நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என அவர்கள் நினைத்திருந்தனர். அந்தப் பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் தளபதி நிகழ்ச்சி. வெளியூரிலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்ள வாய்ப்பில்லை. 


அயோத்தியாப் பட்டிணத்தில் தளபதி அதிக நேரம் பேசியதால், தாமதம்.

                        

ஒவ்வொரு இடத்திலிருந்தும் அண்ணன் ஜெயின் கூபி லைவ் ரிலே செய்து கொண்டே வந்தார். 45 நிமிடம் தாமதமாகி கொண்டிருந்தது. ஜலகண்டாபுரம் 7.50க்கு வருவதாக அறிவிப்பு.

அது அயோத்தியாப்பட்டிணம் - பேளூர் சாலை, தேர்தலுக்காக அவசரமாக அகலப்படுத்தப்பட்டிருந்தது. அகலமான ரோடாக இருந்ததால், 8.00 மணியாகியும் ரோட்டில் கூட்டம் இருப்பதாக தெரியவில்லை. தங்கள் அலுவலத்தில் இருந்து பார்த்த அதிமுகவினர் மகிழ்ச்சியாக இருந்தனர்.

8.10. சேப்பாக்கம் பிரபாகரன் "தளபதி வருகிறார்" என அறிவித்து வந்தார். அவர் வந்த வாகனத்தில் கிராமிய இசைக்குழுவினர் கழகப் பாடல்கள் பாடினர். சிறுசிறு குழுக்களாக பெண்கள் வந்தனர்.

8.20. குடியாத்தம் குமரன் குழுவினர் அறிவித்தப்படி வந்தனர். பின்னாலேயே இறையன்பன் குத்தூஸ் ஒரு லாரியில் இசைக் குழுவோடு பாடியபடி வந்தார். இரண்டு கொள்கை பாடல்களை முழங்கினார். சாலையின் ஒரு புறம் பெண்களும் மறுபுறம் இளைஞர்களும் குவிய ஆரம்பித்தனர்.

8.28. சரசரவென கழகத் தோழர்களின் வாகனங்கள் வர ஆரம்பித்தன. அண்ணன் ஜெயின் கூபி ஒரு பைக்கில் வந்து குதித்தார். தளபதி வாகனம் கண்ணில் பட்டது. சாலையில் அலையடிப்பது போல் கூட்டம், 150க்கும் மேல் பெண்கள், 250க்கும் மேல் ஆண்கள், 751 ஓட்டுகள் இருக்கும் ஊரில்.

இப்போது, அலுவலகத்தில் இருந்த அதிமுகவினரும் ரோட்டுக்கு வந்து நின்று தளபதியை ஆர்வத்தோடு பார்த்தனர்.



தளபதி அவர்கள் வாகனம் ஊருள் நுழைந்தது. இளைஞர்கள் பூ மழை பொழிந்தார்கள். பெண்கள் கும்பம் ஏந்தி வரவேற்றார்கள். முதியவர்கள் கையசைத்து வரவேற்பளித்தனர்.

                        

வாகனத்தின் மீது தோன்றினார், வேட்பாளர் மாறனோடு. மகிழ்ச்சி குரல் மக்களிடமிருந்து. தாமதத்தை ஈடு செய்ய வேண்டி இருந்ததால் சுருக்கமாக, ஷார்ப்பாக பேசினார். பேசி முடித்து கூட்டாத்துப்பட்டி கிளம்பினார். நாங்கள் எங்களது அடுத்த பாயிண்டான சர்க்கார் நாட்டார் மங்கலம் சென்றோம்.

9.30 தளபதி வந்தார். அரசின் அவலங்களை எடுத்துரைத்தார். "இது ஒன்றும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் தேர்தல் அல்ல. இந்த ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த ஊர் கிளை செயலாளர் செந்தில் அவர்களின் நான்கு மாதக் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டினோம். "வெற்றிச் செல்வன்" என்று பெயர் சூட்டினார். தளபதி அவர்கள் வேனின் மீதிருந்து தாவி குழந்தையை வாங்கி உச்சி முகர, மக்களிடம் மகிழ்ச்சி ஆரவாரம்.


                                   

                               

தளபதி கருமாபுரம், மேட்டுபட்டி ஆகிய ஊர்களில் பேசி விட்டு கடைசியாக எங்கள் பகுதியான எம்.பெருமாபாளையம் வர வேண்டும். தாமதத்தை சரி செய்து எங்கள் பகுதிக்கு 10 மணிக்குள் வந்து பேச வேண்டும்.

பெருமாபாளையத்தில் கழக இளைஞர்களும், விடுதலை சிறுத்தை இளைஞர்களும் உற்சாகமாக நடனமாடி ஏரியாவை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உற்சாகத்திற்கு காரணமிருந்தது.

தளபதி அவர்கள் சுற்றுப்பயண முதல் பட்டியலில் இந்த ஊர் இடம் பெறவில்லை. பக்கத்தில் உள்ள மேட்டுப்பட்டி கடைசி ஊராக இருந்தது. அங்கிருந்து பெருமாபாளையம் 100 மீட்டர் தூரம் தான். 2500 வாக்குகள் இருக்கும் பகுதி. உள்ளூர் நிர்வாகிகளின் வேண்டுகோளால் அன்று தான் சேர்க்கப்பட்டது.

அன்று காலை அதிமுகவினர் "இரட்டை" இலை அன்பளித்தும் அந்தப் பகுதி மக்கள் மறுத்து விட்டனர். அந்த கோபத்தில் ஒரு மைக் செட் கட்டி தளபதி நிகழ்ச்சியை நடத்த விடாமல் பிரச்சினை செய்தனர். போலீசாரும் வந்து அனுமதி தராமல் இழுத்தடித்தனர். மாலை 4.30க்கே அனுமதியளித்தனர்.

அதனால் தான் அந்த உற்சாகம். 9.50 தளபதி மேட்டுப்பட்டியில் பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கு பி.பி எகிறியது. 9.56 தளபதி எங்கள் பகுதியில் நுழைந்தார். மகிழ்ச்சி ஆரவாரம் உச்சம். சரியாக நான்கு நிமிடம் பேசி 10.00 மணிக்கு முடித்தார்.

திரும்பிய தளபதி வாகனத்தை மறித்து பெண்கள் ஆரத்தி எடுத்தனர். தளபதி நிகழ்ச்சி நடக்காது என்ற எண்ணத்தில் வேடிக்கை பார்க்க, தங்கள் அலுவலகத்தில் நின்ற அதிமுகவினரையும் பார்த்து கையசைத்து சென்றார்.

# வெற்றிச்செல்வன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக