பிரபலமான இடுகைகள்

சனி, 21 டிசம்பர், 2013

ஏம்பா இவ்வளவு பெரிய லைனா சொன்னீங்க. ..

"சூர்யா project-அ அப்பா கூட உக்காந்து முடிச்சுடு"

பிராஜக்ட்ன உடனே college-ன்னு நினச்சிடாதீங்க. 2 தான். அட +2 இல்லிங்க. ரெண்டாவதுங்க.

"அம்மா நீங்களே முடிச்சுடுங்கம்மா. அப்பாவல்லாம் புடிக்க முடியாது"
"தமிழ் அப்பாவுக்கு தான் சரியா வரும். சோஷியல் நான் வந்துடறேன்"

சரி தப்ப முடியாதுன்னு, ipad-ஐ கீழே வைத்தேன்.

"அப்பா, டைட்டில்ஸ் காந்தி, நேரு, திருப்பூர் குமரன்."

A4 பேப்பரில் அவர்கள் படங்கள் ஒட்டி கோடு போட்டு வைத்திருந்தார். 4, 5 வரிகளில் குறிப்புகள் தயார் செய்ய சொன்னார். நாமே 9, 10 பாரா ஸ்டேடஸ் அடிக்கிற ஆளு. 4, 5 வரியிலன்னு மூச்சு முட்டிடுச்சி.

                                    

தயார் செய்து கொடுத்தேன். ஜவகர்லால் நேரு, திருப்பூர் குமரன் எழுதி முடித்தார். மகாத்மா காந்தி எழுதிக் கொண்டிருந்தார். "அப்பா இன்னும் ஒரு கோடு பாக்கியிருக்கு. இன்னும் கொஞ்சம் சொல்லுங்க"

"இந்திய நாடு ஆங்கிலேயர்களால் அடிமைப் படுத்தப் பட்டிருந்தது. மகாத்மா காந்தி அறவழியில் போராடி விடுதலை பெற்று தந்தார். மகாத்மா இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்."

யோசிச்சி அடுத்த வரியை சொன்னேன். "காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது"

எழுதும் போதே முனகினார். "ஏம்பா இவ்வளவு பெரிய லைனா சொன்னீங்க. கஷ்டப்பட்டு நெருக்கி எழுத வேண்டியதா இருக்குப் பாருங்க."

"இல்லப்பா, நானே உலக அமைதி நாளா கொண்டாடுறத விட்டுட்டு ஷார்ட்டா தான் சொன்னேன்"

"பாரா பாராவா ஸ்டேட்ஸ் போடும் போதே தெரியும். அதுக்கு வேற லைக் போடுறாங்க. அதே மாதிரி லெங்க்த்தா இருக்கு"

# எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு தெரியுது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக