பிரபலமான இடுகைகள்

புதன், 25 டிசம்பர், 2013

உண்மை புரட்சியாளனுக்கு இறுதி மரியாதை

GMT 1042. க்ரீன்வீச் நேரம். இந்திய நேரம் 04.15, காத்திருந்த 21 துப்பாக்கிகள் முழங்கின, இறுதி மரியாதைக்காக.

10.44: பத்து நாட்கள் இறுதி மரியாதைக்கு பிறகு அவரது உடல் அமைதியை நோக்கி... உடல் அடக்கம்.

10.56: ஜெட் விமானங்கள் இடுக்காட்டை வலம் வந்தன, மரியாதை செலுத்த...

11.15: மயானத்திலிருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு வரும் குரல், ஆப்பிரிக்காவின் பாரம்பரியமானது, இறுதி சடங்கிற்க்காக. ஒட்டு மொத்த உலமும் மனதார இறுதி மரியாதை செலுத்தியது.

அது கியூனு கிராமம். தென்னாப்பிரிக்காவின் ஒரு மூலையில் மலையடிவாரத்தில் இருக்கும் கிராமம். தென் ஆப்பிரிக்காவின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் சொந்த கிராமம். இறுதி மரியாதை நெல்சன் மண்டேலாவுக்கு.

                              

--------------------------------------------------------

அதே நாள். சென்னை. அண்ணா அறிவாலயம். மாலை 5.00 மணி, இந்திய நேரம். தி.மு.க பொதுக்குழுவின் மாலை அமர்வு.

இறுதியாக தலைவர் கலைஞர் உரை. பேச்சை துவங்கியவர், மண்டேலாவை குறிப்பிட்டார், “இப்போது இந்தப் பொதுக்குழுவில் காலை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானமாக அமைந்தது, நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து நமது மன வேதனையை வெளிப்படுத்திய அனுதாபத் தீர்மானமாகும்.”

"Honesty, sincerity, simplicity, humility, pure generosity, absence of vanity, readiness to serve others - qualities which are within easy reach of every soul - are the foundation of one’s spiritual life. இதனைத் தமிழிலே சொல்ல வேண்டுமேயானால் நேர்மை, உண்மை, எளிமை, பணிவு, தாராள மனப்பான்மை, தற்பெருமை இன்மை, மற்றவர்க்குச் சேவை செய்யத் தயாராக இருக்கும் மனநிலை ஆகிய குணநலன்களே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படையாகும்”. இது நெல்சன் மண்டேலாவினுடைய வார்த்தைகள்.

அது மாத்திரமல்ல; மேலும் சொல்கிறார். “மாறாததும் மாறுவதும் - வலிமையானதும் வலுவிழந்ததும் - புகழ் மிக்கதும் புகழ் இழந்தது மான முரண்பாடுகள் மிக்க ஆண்களோடும், பெண்களோடும் வாழ்க்கையில் நாம் பழகுகிறோம்; கடவுளர்களோடு அல்ல; நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களுடனேயே நாம் பழகுகிறோம்” இதுவும் நெல்சன் மண்டேலா எடுத்துச் சொன்ன வாசகம் தான்.

“எந்த மண்டேலா அவர்களுக்கு நாம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இங்கே நம்முடைய கண்ணீரைக் காணிக்கையாக்கினோமோ, அந்த மண்டேலா உதிர்த்த வார்த்தைகளை, வாசகங்களை, வழிமுறைகளை, மனித சமுதாயத்தைப் பற்றிய மகோன்னதமான எண்ணங்களை, ஆண்டவனைப் பற்றி அவர் சொன்ன உண்மைகளை, மனதிலே பதிய வைத்துக் கொண்டால் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மாத்திரமல்ல...

அவருடைய கருத்துக்களை, எப்படி பெரியாருடைய கருத்துகளை, அண்ணாவின் எண்ணங்களை நாம் பின்பற்றி நடக்க இன்றைக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறோமோ, அதற்குப் பெரும் உதவியாக நான் இங்கே எடுத்துச் சொன்ன இந்த வாசகங்கள், நெல்சன் மண்டேலாவின் வாசகங்கள் துணை புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதைத் தான் நான் இங்கே உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.”

இது தலைவர் கலைஞர் அவர்கள் பொதுக்குழுவில் மண்டேலா அவர்கள் நினைவாக ஆற்றிய உரை.

--------------------------------------------------------------------

ஒரு பிளாஷ்பேக்...... 1990 பிப்ரவரி 11. திருச்சி தி.மு.க மாநாடு. காலை அமர்வு. மக்கள் வெள்ளம்.

திடீரென தலைவர் கலைஞர் ஒலிவாங்கி முன் வருகிறார். “எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி. 27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா நாட்டின் கருப்பர் இனத் தலைவன் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு விட்டார்.”

மாநாட்டு பந்தலே திணறியது, கைத்தட்டல் ஒலியில். தலைவர் கலைஞர் கையமர்த்துகிறார், “போதும், போதும்” என கையொலி அடக்க.

பிளாஷ்பேக் சொல்லக் காரணம், இரங்கல் தீர்மானம் மட்டுமல்ல அவர் விடுதலை அடைந்த போதே கொண்டாடியவர் தான் கலைஞர்.

தென்னாப்பிரிக்கர்கள் வாக்குகளோ, மண்டேலா மீது பிரியம் கொண்டவர்கள் வாக்குகளோ தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போவதில்லை.

# கலைஞர் மண்டேலாவுக்கு செலுத்தும் மரியாதை, உண்மை புரட்சிக்கான மரியாதை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக