பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 ஜூலை, 2014

ஓடிப் போன 'ஜெ'வும், ஓடுகாலியும்...

சட்டமன்றத்தில் அமைச்சர் வைத்தி “ஓடுகாலியை” பயன்படுத்தியது ஒரு திசை திருப்பும் உத்தி. ஜெ-வின் மூளையில் உதித்தது. 11 மாடி பிரச்சினையை திசை திருப்புவதற்கு கையாண்ட உத்தி.

              

10-ந் தேதி சட்டமன்றம் கூடிய அன்று, எதிர்கட்சிகள் 61 பேர் உயிர் பலியான பிரச்சினையை எழுப்பி, நீதி கேட்பார்கள், பிரளயம் நிகழும் என்று ஜெயலலிதாவிற்கு தெரியும்.

அன்று வழக்கத்திற்கு மாறாக சபாநாயகர் வருவதற்கு முன்பாக, தான் எப்பொழுதும் வரும் நேரத்திற்கு முன்பாகவே அவையில் வந்து அமர்ந்தார். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேறின. அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது தலைமை செயலக வளாகத்தில் உள்ள, மராமத்து வேலைகள் முடிந்த நாமக்கல் கவிஞர் மாளிகையை, புதியக் கட்டிடத்தை போல், நேரில் போய் திறந்து வைத்தார் ஜெ.

அதற்கு பிறகு சட்டமன்றம் வந்தவர் சிறிது நேரம் அமர்ந்திருக்கிறார். கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் ஸீரோ ஹவர் வரும்.

அதில் 11 மாடிக் கட்டிடப் பிரச்சினை எழுப்ப எதிர்கட்சிகள் காத்திருப்பது ஜெ-வுக்கு தெரியும். கேள்வி நேரத்தின் இடையிலேயே எழுந்து கிளம்புகிறார். அறைக்கு சென்று திரும்புவார் என எதிர்கட்சி உறுப்பினர்கள் நினைத்திருக்கிறார்கள், ஆளும் கட்சி உறுப்பினர்களும்.

சில அமைச்சர்கள் பின்னால் செல்கிறார்கள். சிறிது நேரத்தில் சட்டமன்ற வளாகம் பரப்பரப்படைகிறது. முதல்வர் கான்வாய் கிளம்புகிறது. ஜெ வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

அப்புறம் தான் அவர் ஆலோசனையை பெற்றிருந்த அமைச்சர் வைத்தி “ஓடுகாலி” என எகிறி குதித்தது, எதிர்கட்சிகளை பேச விடாமல் சபா துள்ளிக் குதித்தது எல்லாம்.

சின்னப் பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆணித்தரமாக(அப்படி நினைத்துக் கொண்டு) பதில் சொல்லும் முதல்வர் ஜெயலலிதா 61 பேர் இறந்த கோர விபத்தில் அரசின் கொடூர முகத்திரை கிழிந்து விடும் என்பதால் தான் ஓடிப் போனார்.
அப்படி செய்தால், மக்கள் கவனத்தில் இருந்து அந்தப் பிரச்சினையை தவிர்த்து விடலாம், திசை திருப்பி விடலாம் என்பது ஜெயலலிதாவின் எண்ணம்.

ஜெயலலிதாவை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் அந்த வழியில் தான், இது போன்ற அரசுக்கு சிக்கல் தரும் செய்திகளை வெளியிடாமல், திமுக குறித்து அவதூறு எழுதுவதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.

அதன் அட்வான்ஸ் லெவல் தான் குமுதம் ரிப்போர்ட்டர். தமிழகத்தின் வார இதழ்கள் 11 மாடிப் பிரச்சினையை எழுதி வரும் நிலையில் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் திசை திருப்பும் உத்தியே அந்த கவர் ஸ்டோரி.

இப்படியான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தால், மக்கள் இவர்களை மஞ்சள் பத்திரிக்கையாகத் தான் பார்ப்பார்கள் என்பதை உணரவில்லை. இவர்களுக்கும் குடும்பம் உண்டு என்பதை உணர்வதில்லை.

# எந்த ஆயுதம் எடுக்கிறாயோ, அந்த ஆயுதத்தால் தான் அழிவாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக