பிரபலமான இடுகைகள்

புதன், 23 ஜூலை, 2014

எதிரணி இல்லாத மைதானத்தில் கோல் போட...

போலீஸ் துறை மான்யத்தில் அம்மா, எதிரணி இல்லாத மைதானத்தில் ஓங்கி ஓங்கி அடித்து “கோல்” போடுவார்கள். அதற்காகவே ஏற்கனவே நான் சொன்னபடி சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்கள்.

   Photo: போலீஸ் துறை மான்யத்தில் அம்மா ஆள் இல்லாத மைதானத்தில் ஓங்கி ஓங்கி அடித்து “கோல்” போடுவார்கள். அதற்காகவே ஏற்கனவே நான் சொன்னபடி சட்டமன்றத்தில் இருந்து திமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50க்கு மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள், எண்ணற்ற கொலைகள், கொள்ளைகள் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக திருப்திகரமாக இருப்பதை திமுக உறுப்பினர்கள் “பாராட்டுவார்கள்”, அதை விடக் கூடாது என்பதே அவர்கள் எண்ணம்.

நேற்றைய முன்தினம் மின்துறை மானியத்தில் பேச ஆரம்பித்த ஐ.பெரியசாமி அவர்களை பேச விடாமல், எழுந்து எழுந்து வம்பிழுத்தார் அமைச்சர் நத்தம். ஒரு மணி நேரம் இந்த இழுபறி நடந்தது. இதில் பத்து நிமிடம் தான் ஐ.பி பேசியிருப்பார். மீதி நேரம் முழுதும் நத்தத்தின் மின்தடை தத்துவம் தான்.

எப்போதாவது தான் தளபதி அவர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளிப்பார்கள். மிகுந்த ஜெண்டிலாக நடந்து கொள்கிறார் என்பது அதிமுக உறுப்பினர்களே சொல்வது. அவர் இன்று ஒரு விளக்கம் அளிக்க பத்து நிமிடம் முயன்றும் சபா அனுமதிக்கவில்லை.

இன்று வறட்சி குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய மந்திரி உதயகுமார் தேவை இல்லாமல் தலைவர் கலைஞரை விமர்சனம் செய்தது திமுக உறுப்பினர்களை வம்புக்கு இழுத்து வெளியே அனுப்ப தான். அனுப்பியாயிற்று.

தளபதி அவர்கள் கீழ்கண்டவாறு கண்டித்திருக்கிறார்கள்
“அமைச்சர் சொல்வதையும் ஒழுங்காக சொல்லாமல் வேண்டுமென்றே எங்களை கோபப்படுத்த வேண்டும், நாங்கள் எழும்பி கேள்வி கேட்க வேண்டும், அதன் பிறகு அவையிலே பிரச்சனை எழுப்பப்பட வேண்டும், அந்த பிரச்சனையால் நாங்கள் எல்லாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 

அதாவது இந்த அவைக்கு வருவதை ஆளுங்கட்சியில் இருக்கக் கூடிய அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லை, முதலமைச்சருக்கும் பிடிக்கவில்லை, குறிப்பாக சபாநாயகருக்கும் பிடிக்கவில்லை. ஆக திட்டமிட்டு வேண்டுமென்றே எங்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்து அந்தப் பணியை சபாநாயகர் முறையாக செய்து கொண்டிருக்கிறார். 

ஆகவே சர்வாதிகார சபாநாயகருடைய இந்த போக்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து இன்றைக்கும் வெளியேற்றியிருக்கிறாரகள். அது தான் மிக கொடுமையான ஒரு நடவடிக்கை. 

அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்ககூடிய சர்வாதிகாரி சபாநாயகரை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நாங்கள் அனைவரும் கண்டிக்கிறோம்.”

# இங்கே இருந்து தான் வெளியேற்றி இருக்கிறீர்கள். மக்களை சந்திக்கப் போகிறோம்...

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50க்கு மேற்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள், எண்ணற்ற கொலைகள், கொள்ளைகள் என்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிக திருப்திகரமாக இருப்பதை திமுக உறுப்பினர்கள் “பாராட்டுவார்கள்”, அதை விடக் கூடாது என்பதே அவர்கள் எண்ணம்.

நேற்றைய முன்தினம் மின்துறை மானியத்தில் பேச ஆரம்பித்த ஐ.பெரியசாமி அவர்களை பேச விடாமல், எழுந்து எழுந்து வம்பிழுத்தார் அமைச்சர் நத்தம். ஒரு மணி நேரம் இந்த இழுபறி நடந்தது. இதில் பத்து நிமிடம் தான் ஐ.பி பேசியிருப்பார். மீதி நேரம் முழுதும் நத்தத்தின் மின்தடை தத்துவம் தான்.

எப்போதாவது தான் தளபதி அவர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளிப்பார்கள். மிகுந்த ஜெண்டிலாக நடந்து கொள்கிறார் என்பது அதிமுக உறுப்பினர்களே சொல்வது. அவர் இன்று ஒரு விளக்கம் அளிக்க பத்து நிமிடம் முயன்றும் சபா அனுமதிக்கவில்லை.

இன்று வறட்சி குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய மந்திரி உதயகுமார் தேவை இல்லாமல் தலைவர் கலைஞரை விமர்சனம் செய்தது திமுக உறுப்பினர்களை வம்புக்கு இழுத்து வெளியே அனுப்ப தான். அனுப்பியாயிற்று.

தளபதி அவர்கள் கீழ்கண்டவாறு கண்டித்திருக்கிறார்கள்
“அமைச்சர் சொல்வதையும் ஒழுங்காக சொல்லாமல் வேண்டுமென்றே எங்களை கோபப்படுத்த வேண்டும், நாங்கள் எழும்பி கேள்வி கேட்க வேண்டும், அதன் பிறகு அவையிலே பிரச்சனை எழுப்பப்பட வேண்டும், அந்த பிரச்சனையால் நாங்கள் எல்லாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

அதாவது இந்த அவைக்கு வருவதை ஆளுங்கட்சியில் இருக்கக் கூடிய அமைச்சர்களுக்கும் பிடிக்கவில்லை, முதலமைச்சருக்கும் பிடிக்கவில்லை, குறிப்பாக சபாநாயகருக்கும் பிடிக்கவில்லை. ஆக திட்டமிட்டு வேண்டுமென்றே எங்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்து அந்தப் பணியை சபாநாயகர் முறையாக செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே சர்வாதிகார சபாநாயகருடைய இந்த போக்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து இன்றைக்கும் வெளியேற்றியிருக்கிறாரகள். அது தான் மிக கொடுமையான ஒரு நடவடிக்கை.

அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்ககூடிய சர்வாதிகாரி சபாநாயகரை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நாங்கள் அனைவரும் கண்டிக்கிறோம்.”

# இங்கே இருந்து தான் வெளியேற்றி இருக்கிறீர்கள். மக்களை சந்திக்கப் போகிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக