பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

அன்பிற்குரிய பிரதமர் மோடி...

அன்பிற்குரிய பிரதமர் மோடி,

                    A Ahmedabad court has asked the Ahmedabad Crime Branch to submit a report in a complaint against Prime Minister Narendra Modi of violating the model code of conduct during the polling period. File photo

உங்கள் சகாக்கள் இந்தியை தேசிய பாஷையாக்க அவசரக் கோலத்தில் முயற்சிப்பதாக அச்சமுறுகிறோம். இந்தியா ஒரு தேசமல்ல, பல மாநிலங்களின் கூட்டமைப்பு. இது பல மதங்களை உள்ளடக்கியது, பல இனங்களை உள்ளடக்கியது, அது போல பல மொழிகளை கொண்டது.

நடுவணரசின் பல அமைச்சகங்களின் சமீபத்திய அறிவிப்புகளினால் ஏற்பட்ட விளைவால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன், ஹிந்தி பேசாத மாநிலங்களின் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர சங்கடத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக.

நான் ஒரு தமிழன் என்பதை போல், நீங்கள் ஒரு குஜராத்தி. உங்கள் இல்லத்தில் குஜராத்தி மட்டுமே பேசுவீர்கள் என நினைக்கிறேன், எங்கள் இல்லத்தில் நாங்கள் தமிழ் பேசுவது போல. எனவே எங்கள் துடிப்பை நீங்கள் அவசியம் அறிவீர்கள், உணர்வீர்கள்.

அரசு மொழிகளுக்கான சட்டம் ஹிந்திக்கும், ஆங்கிலத்திற்கும் ஒரு உயர் இடத்தை வழங்கியுள்ளது, அரசின் இணைப்பு மொழியாக. இந்திய அரசின் இந்தியை பரப்புவதற்கான வேகமான நடவடிக்கைகளால், இந்தி அல்லாத மற்ற மொழிகள் அரசு மற்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களிலேயே.

இந்திய அரசின் "இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே" என்ற கொள்கை இந்தி பேசாத கோடிக்கணக்கான மக்களை பின்னோக்கி தள்ளுகிறது அதே போல, இந்தி பேசாதோரிடம் ஒதுக்கப்படுவதான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

சமூக அநீதியான இந்த மொழிக் கொள்கை இந்தி பேசாதோரை இணைப்பதை காட்டிலும் பிரிப்பதற்கே வழிவகுக்கும். "ரஷ்யா" நமக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது. மொழிக் கொள்கையே ரஷ்யா பல நாடுகளாக பிரிந்ததற்கான முக்கிய காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எங்களது முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், உங்கள் ஆட்கள் தங்கள் பணியை துவங்கிய உடனேயே எதிர்குரலை எழுப்பினார், உங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா அவர்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

உங்களது பேச்சுக்களில் இருந்து மக்கள், நீங்கள் மக்களின் பிரச்சினையில் கவனமாக இருப்பீர்கள் என்ற மனநிலையில் உள்ளனர். இந்த அபாயகரமான அநீதியை கணக்கில் கொள்வீர்கள் மற்றும் இந்தி அல்லாத மற்ற மொழிகளை காக்கவும், இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு இணையாக வளர்க்கவும் துணை நிற்பீர்கள் என எண்ணுகிறோம். மொழி சமநிலையானது பல மொழி பேசுகிற இந்திய மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும்.

1. அரசு அதிகாரப்பூர்வ மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, 8-வது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளையும் இந்தியாவின் அரசு மொழியாக அறிவியுங்கள்.
2. உங்கள் சகாக்களை சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியை திணிக்கிற முயற்சியை நிறுத்த சொல்லுங்கள்.


அன்புடன்
இந்தியாவில் வசிக்கும் தமிழன்.

The Prime Minister of India: Make all Indian Languages as Official Languages - Sign the Petition!
சிவசங்கர் just signed this petition on Change.org.
99 signatures are still needed!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக