பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மக்கள் கூடி எடுத்த விழா - மாமன்னனுக்கு !


மக்கள் கூடி எடுத்த விழா, மாமன்னன் இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா. கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஏழு கிராமத்து மக்கள் கூடி விழா எடுக்க முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர் அண்ணன் கோமகன்.

சரியாக ஒரு மாதம் முன் தான் முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அதற்கு பிறகு ஊர் கூடி பேசி, கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். முகநூல் பதிவுகள் மூலம் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இதற்கிடையில் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரையா, மார்கழி திருவாதிரையா என்ற சர்ச்சை வேறு. இதனை தீர்க்க கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களோடு திருவாரூர் பயணம் செய்தார் அண்ணன் கோமகன்.

                 

அங்கு தியாகராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனே செதுக்கி வைத்த கல்வெட்டை ஆதாரமாக உறுதிப் படுத்திக் கொண்டு விழா ஏற்பாடுகள் ஆரம்பமானது.

விழாவில் பங்கேற்ற அறிஞர்கள், சான்றோர்கள் தேதிகளை, நேரத்தை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை திட்டமிட்டு, அழைப்பிதழ் தயாரிப்பதற்குள் நாட்கள் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டன. அண்ணன் கோமகனும் குழுவினரும் பம்பர வேகத்தில் இயங்கினர்.

அரசு ஆதரவு இல்லாதது ஒரு புறம், நிதி நெருக்கடி ஒரு புறம், நேர நெருக்கடி இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து விழா மிக, மிக சிறப்பாக நடந்தேறியது. திட்டமிட்டப்படி துல்லியமாக நடைபெற்றது அடுத்து குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் ஊடகத்துறை மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகப் பெரிய வெற்றியாக்கினர்.

உள்ளூர் இளைஞர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது. தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்தி பெரும் இளைஞர் கூட்டம் இருசக்கர வாகனங்களில். தவறாமல் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்கு இராஜேந்திர சோழ மண் சார்பாக நன்றி. நான் பார்வையாளனாக சென்று கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.


கருத்தரங்கில் பேசிய சான்றோர்கள் அனைவருமே அண்ணன் கோமகன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தையும் நன்றியையும் சொன்னார்கள். இதற்கு எல்லாம் உச்சம் நிகழ்வுகளின் கடைசியாக நடைபெற்றது.

ஒரு பெரும் இளைஞர் கூட்டம் திடுமென மேடையில் ஏறினார்கள். கையில் ஆளுயர ரோஜா மாலை. மேடைக்கு பின்புறமிருந்து அண்ணன் கோமகனை அழைத்து வந்தார்கள். அதற்கு முன் மேடையில் அதிகம் தலைகாட்டாமல் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு ரோஜா மாலையை சூட்டி கையில் ஒரு வாளை வழங்கினார்கள்.

              Photo: மக்கள் கூடி எடுத்த விழா, மாமன்னன் இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா. கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஏழு கிராமத்து மக்கள் கூடி விழா எடுக்க முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர் அண்ணன் கோமகன்.

சரியாக ஒரு மாதம் முன் தான் முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அதற்கு பிறகு ஊர் கூடி பேசி, கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். முகநூல் பதிவுகள் மூலம் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இதற்கிடையில் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரையா, மார்கழி திருவாதிரையா என்ற சர்ச்சை வேறு. இதனை தீர்க்க கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களோடு திருவாரூர் பயணம் செய்தார் அண்ணன் கோமகன்.

அங்கு தியாகராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனே செதுக்கி வைத்த கல்வெட்டை ஆதாரமாக உறுதிப் படுத்திக் கொண்டு விழா ஏற்பாடுகள் ஆரம்பமானது.

விழாவில் பங்கேற்ற அறிஞர்கள், சான்றோர்கள் தேதிகளை, நேரத்தை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை திட்டமிட்டு, அழைப்பிதழ் தயாரிப்பதற்குள் நாட்கள் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டன. அண்ணன் கோமகனும் குழுவினரும் பம்பர வேகத்தில் இயங்கினர்.

அரசு ஆதரவு இல்லாதது ஒரு புறம், நிதி நெருக்கடி ஒரு புறம், நேர நெருக்கடி இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து விழா மிக, மிக சிறப்பாக நடந்தேறியது. திட்டமிட்டப்படி துல்லியமாக நடைபெற்றது அடுத்து குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் ஊடகத்துறை மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகப் பெரிய வெற்றியாக்கினர். 

உள்ளூர் இளைஞர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது. தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்தி பெரும் இளைஞர் கூட்டம் இருசக்கர வாகனங்களில். தவறாமல் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்கு இராஜேந்திர சோழ மண் சார்பாக நன்றி. நான் பார்வையாளனாக சென்று கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.

கருத்தரங்கில் பேசிய சான்றோர்கள் அனைவருமே அண்ணன் கோமகன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தையும் நன்றியையும் சொன்னார்கள். இதற்கு எல்லாம் உச்சம் நிகழ்வுகளின் கடைசியாக நடைபெற்றது.

ஒரு பெரும் இளைஞர் கூட்டம் திடுமென மேடையில் ஏறினார்கள். கையில் ஆளுயர ரோஜா மாலை. மேடைக்கு பின்புறமிருந்து அண்ணன் கோமகனை அழைத்து வந்தார்கள். அதற்கு முன் மேடையில் அதிகம் தலைகாட்டாமல் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு ரோஜா மாலையை சூட்டி கையில் ஒரு வாளை வழங்கினார்கள்.

அவர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க பட்டபாடு அத்தனைக்கும் சிறந்த மரியாதையாக அமைந்தது.

# பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றிகள் !

அவர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க பட்டபாடு அத்தனைக்கும் சிறந்த மரியாதையாக அமைந்தது.

# பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றிகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக