பிரபலமான இடுகைகள்

திங்கள், 19 அக்டோபர், 2015

அடுத்த டூர் கிளம்பியாச்சா ?

மத்திய கிழக்கு நாடுகளில் அது ஒன்று. இந்தியாவை போல அது ஒரு தீபகற்பம். மூன்று புறமும் கடலாலும், ஒரு புறம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. மூன்று புறம் பாரசீக வளைகுடாவும் ஒரு புறமும் சௌதி அரேபியாவும் எல்லை.

50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. குடியிருப்புகளும் ஆயுதங்களும் கற்காலத்தை சேர்ந்தவை, இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. மெசோபொடமியன் நாகரிகத்தின் அடையாளங்கள், கைவிடப்பட்ட கடலோர குடியிருப்புகளின் மிச்சத்தில் இருக்கிறது.

"என்ன திடீர்னு வரலாற்று பாடம் ?". "ஒரு நாட்டுக்கு போறதுக்கு முன்ன அதன் வரலாற்ற தெரிஞ்சிக்கனும்ல". "கிளம்பியாச்சா அடுத்த டூர்?". "பாஸ், சிங்கப்பூர்  போய் வந்து ஒரு வருஷம் ஆச்சு". "சரி, மேல சொல்லுங்க".

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு. 1971ல் சுதந்திரம் வழங்கப்பட்டாலும், அரச குடும்ப அதிகாரத்தின் கீழ் வந்தது. அதற்கு பிறகு தான் பெட்ரோல் மற்றும் இயற்கைவாயு கிடைக்க ஆரம்பித்தது. அவ்வளவு தான் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது நாட்டில்.

1995ல் அரசரிடம் இருந்து அதிகாரம் மகன் கைக்கு வந்தது. அதற்கு பிறகு லேசான சுதந்திரம். அதுக்குன்னு கூட்டம் போட்டு கொடி பிடிச்சா உள்ள தான் போகனும். 1999ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. 2005ல் தான் அரசியல் சட்டம் எழுதப்பட்டது.

எண்ணெய் பணம் கொட்ட ஆரம்பித்த பிறகு, வெளி நாட்டினர் வேலைத் தேடி குவிய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் உள்ளூர்வாசிகளை விட வெளிநாட்டு மக்கள் எண்ணிக்கை கூடிவிட்டது. மொத்த மக்கள் தொகை 18 லட்சம். உள்ளூர்காரர்கள் 2.78.000 பேர் தான். அதாவது உள்ளூர் மக்கள் 13 சதவீதம் தான்.

இது தான் இன்றைய தேதிக்கு உலகின் பணக்கார நாடு. 2012 சர்வே படி இந்த நாடு தான் உலகின் நம்பர் 1. அடுத்து, தூரத்தில் லக்ஸம்பர்க். அடுத்து சிங்கப்பூர். நீண்ட காலமாக இதனை தக்க வைத்து வருகிறது.

"ஒகே. அங்க போய் என்ன சுத்தி பார்க்கப் போறீங்க?". "சுத்திப் பார்க்க போகல பாஸ். அழைச்சிருக்காங்க போறேன்". "யாரு அரபு ஷேக்கா?". "இந்த நக்கல் தான வேண்டாம்கிறது. நம்ம ஆளுங்க தான்". "அங்கேயேயும் நம்ம ஆளுங்களா?".

"இந்த 87% வெளிநாட்டினர் இருக்காங்க இல்ல, அதுல மெஜாரிட்டி இந்தியர்கள் தான். 5,45,000 பேர் இருக்காங்க. அதில் கணிசமா தமிழர்கள், அதில் நம்ம திமுக உடன்பிறப்புகள். சும்மா இருப்பாங்களா, ஃபார்ம் ஆயிட்டாங்க"

"அந்தத் தோழர்கள் தான் நிகழ்ச்சிக்கு அழைச்சிருக்காங்க. ரெண்டு மாசம் முன்னாடி அண்ணன் தங்கம்.தென்னரசு போயிட்டு வந்தார். இப்போ அண்ணன் பெரியண்ணன் அரசுவோட என்னையும் அழைச்சிருக்காங்க.". "எப்போ?". "அக்டோபர் 23 நிகழ்ச்சி". "இத சொல்லி ஊர சுத்திப் பார்க்கப் போறீங்க, எஞ்சாய். சரி, எந்த நாடு?".

#கத்தார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக